ஆவின் பால் கலப்பட வழக்கில் வைத்தியநாதன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட மூன்று பேரை விடுவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து சென்னை ஆவின் நிறுவனத்துக்கு டேங்கரில் கொண்டு வரப்படும் பாலைத் திருடி அதற்குப் பதிலாக தண்ணீர் கலப்படம் செய்யப்பட்டதாக லாரி நிறுவன உரிமையாளர் வைத்தியநாதன் உள்ளிட்ட 23 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய வைத்தியநாதன் உள்ளிட்டோரின் மனுக்களை விழுப்புரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதற்கு எதிரான வைத்தியநாதன், அவரது மனைவி உள்ளிட்ட மூன்று பேரின் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி, கலப்படம், திருட்டுக்கான ஆதாரம் எதுவும் இல்லை என்பதால், வழக்கை விசாரிப்பது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் செயல் எனக் கூறி அவர்களை விடுவித்து உத்தரவிட்டார்.