அண்ணா பல்கலை, உறுப்புக் கல்லூரிகளில் நாளைய தேர்வுகள் ஒத்திவைப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உறுப்புக் கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் டிசம்பர் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கஜா புயல் காரணமாக ஏற்கெனவே கடந்த வியாழன், வெள்ளி, சனி, ஆகிய 3 நாட்கள் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், கஜா புயல் பாதித்த மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களை மனதில் கொண்டு, 2, 3 மற்றும் 4-ஆம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்காக நாளை நடத்தப்படவிருந்த தேர்வுகள், வரும் டிசம்பர் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, எம்.ஐ.டி., கட்டிடக்கலைப் பள்ளி  ஆகியவற்றிற்கு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தவாறு, தேர்வுகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *