ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவு

ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகிய நிறுவன அதிகாரிகள் இன்று தகவல் தொழில் நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு முன் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

அனுரக் தாக்கூர் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு முன் கடந்த மாதம் டிவிட்டர் அதிகாரிகள் ஆஜராகினர். அப்போது நாடாளுமன்றத் தேர்தலில் வெளிநாட்டு சக்திகளின் தலையீடு தடுக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு விளக்கம் பெறப்பட்டது.

மேலும் கருத்துத் திணிப்பற்ற தேர்தலை உறுதி செய்ய சமூக வலைதள நிறுவனங்கள் 24 மணி நேரமும் தேர்தல் ஆணையத்துடன் தொடர்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகிய நிறுவன அதிகாரிகள் இன்றைய தினம் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *