ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள மிகவும் ஆபத்தான ரசாயனக்கழிவுகளை வெளியேற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் – ஆட்சியர்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள மிகவும் ஆபத்தான ரசாயனக்கழிவுகளை வெளியேற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் இருந்த ரசாயனப் பொருள்களை அகற்றும் பணிகள் 90 சதவிகிதம் நிறைவடைந்து விட்டதாகக் கூறினார். இன்னும் அகற்றப்படாமல் வைத்திருக்கும் ரசாயனம் மற்றும் மூலப்பொருள்களால் தீ விபத்து போன்றவை நேரிடக்கூடும் என்றும் சந்தீப் நந்தூரி குறிப்பிட்டார். எனவே, உதவி ஆட்சியர் தலைமையிலான குழு மீண்டும் ஆலையில் ஆய்வு நடத்த உள்ளதாக சந்தீப் நந்தூரி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *