கடலில் குளித்த 3 கல்லூரி மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

நாகை மாவட்டம் பூம்புகாரில் கடலில் குளித்த மூன்று கல்லூரி மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

மயிலாடுதுறையில் உள்ள ஞானாம்பிகை அரசு கலைக் கல்லூரியை சேர்ந்த ஏழு மாணவிகள் பூம்புகார் கடற்கரைக்கு சென்றுள்ளனர். அங்கு ஐந்து மாணவிகள் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது இரு மாணவிகள் கடற்கரையில் இருந்துள்ளனர்.

அப்போது பெரிய அலையில் சிக்கிய ஐந்து மாணவிகளும் ஆழமான பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டு நீரில் மூழ்கியுள்ளனர். இதையடுத்து சங்கீதா, ஹசீனா பேகம் ஆகிய இரு மாணவிகளை அப்பகுதியில் இருந்த மீனவர்கள் உயிருடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் விவேகா, மஞ்சு, சிவப்பிரியா ஆகிய மூன்று மாணவிகள் சடலமாக மீட்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *