சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டியின் போது வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாட வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை போயஸ் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக மக்களின் நியாயமான கோரிக்கையான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் ஒட்டுமொத்த தமிழர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று அவர் எச்சரித்தார்.
தமிழ்நாடே காவிரிக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் ஐபிஎல் போட்டியை நிறுத்தினால் நல்லது என்றும் ரஜினி கூறினார். மேலும் தமிழக மக்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.