சென்னையில் எஸ்.பி.ஐ உள்ளிட்ட 14 வங்கிகளில் 824 கோடி ரூபாய் மோசடியாக கடன் பெற்ற விவகாரத்தில் கனிஷ்க் தங்க நகை நிறுவன உரிமையாளர் பூபேஷ்குமாரிடம் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கனிஷ்க் நிறுவனம், இருப்பு மற்றும் விற்பனை கணக்குகளை மோசடியாக தயாரித்து, வங்கிகளில் கடன் பெற்றது தெரியவந்துள்ளது. ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, எச்.டி.எஃப்.சி., பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட 14 வங்கிகள் கனிஷ்க் நிறுவனத்துக்கு 824 கோடியே 15 லட்சம் ரூபாய் கடனாகக் கொடுத்துள்ளன. கடனுக்கு பல மாதங்களாக வட்டி கட்டப்படாததையடுத்து எஸ்.பி.ஐ வங்கி தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு சி.பி.ஐ.க்கு புகார் கடிதம் அனுப்பியது.