நாகப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரெனப் பெய்த கனமழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
சூறைக் காற்றுடன் பெய்த கனமழையால் சாலைகள், தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த சில மாதங்களாகவே நாகை பகுதியில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், திடீரெனப் பெய்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதேபோன்று திருநெல்வேலி மாவட்டம் தென்காசி, சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை கொட்டியது. இதனால் சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் எலுமிச்சை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.