துப்பாக்கி சூடு மக்கள் மீது நடத்தப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது – க.மாதவன்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடியவர்கள் மீது போலிஸ் துப்பாக்கி சூடு நடத்தி, பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. உச்ச கட்டமாக , துப்பாக்கி சூடு மக்கள் மீது நடத்தப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இத்தகைய சூழல் வராமல் அரசு யாவற்றையும் தடுத்திருக்க வேண்டும். ஊடகங்களில் களத்தைப் பார்க்கும்போது நெஞ்சம் பதறுகிறது. இப்பொழுதும் உயிர் பலியான குடும்பங்களுக்கும் , காயம் அடைந்தவர்களுக்கும் உரிய நிவாரணத்தையும் சிகிச்சைகளையும் அரசு தந்திட வேண்டும்.
மத்திய மாநில அரசுகள் மக்கள் எதிர்க்கும் ஸ்டெர்லைட் ஆலையை அங்கிருந்து. அப்புறப்படுத்துவது தான் இதற்கு ஒரே தீர்வு. தூத்துக்குடி மாவட்டத்தில் மிக விரைவில் அமைதி திரும்ப அரசு ஆவணச் செய்ய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *