திண்டுக்கல்லில் லாரி மீது கார் மோதி விபத்து : 4 இளைஞர்கள் பலி

திண்டுக்கல் அருகே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் கார் மோதிய விபத்தில் இளைஞர்கள் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பெங்களூரைச் சேர்ந்த ஹரீஸ், லோகேஷ், பாபு, மஞ்சுநாதன் ஆகியோர், அருப்புக்கோட்டையில் நடைபெற்ற நண்பரின் திருமணத்துக்கு காரில் சென்றுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற லாரியின் பின்புறமாக கார் மோதியதில், 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

4 பேர் உடலையும் கைப்பற்றிய போலீசார், காரை ஓட்டியவர் தூக்க கலக்கத்தில் லாரி மீது மோதியிருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இதனிடையே, விபத்துக்கு காரணமான லாரி, தப்பிச் சென்றதை சுங்கச்சாவடியில் இருந்த சிசிடிவி காட்சி மூலம் கண்டறிந்த போலீசார், லாரி ஓட்டுநர் மாரிமுத்துவை மதுரையில் வைத்து கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *