கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேவரபெட்டா கிராமத்தை சேர்ந்த கணேஷ்-மாலா தம்பதிக்கு 3 வயதில் குழந்தை ஒன்று உள்ள நிலையில், மாலா 2-வது பிரசவத்திற்காக பெங்களூரு சென்றுள்ளார்.
இந்த நிலையில், கணேஷுக்கும், அவரது அண்ணன் சங்கரப்பாவிற்கும் குடிபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, தான் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்த சங்கரப்பா தனது தம்பி கணேஷை சுட்டதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
தம்பியை சுட்டுக் கொன்றுவிட்டு தலைமறைவாகியுள்ள சங்கரப்பாவை தளி போலீசார் தேடிவருகின்றனர்