தமிழ் மொழி இனிமையான மொழி என்பதால் விரும்புகிறேன் – ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேச்சு

தமிழ் மொழி இனிமையான மொழி என்றும், அதனால் தான் தமிழை விரும்புவதாகவும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியுள்ளார்.

கோவை சரவணம்பட்டியில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டு, மகாத்மா காந்தி மைய நூலகத்தையும், ஞானசமை என்னும் தியான மையத்தையும் திறந்து வைத்தார். பின்னர் மாணவர்களிடையே பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பணம், புகழ் ஆகியவற்றைக் காட்டிலும், ஒழுக்கம் வாழ்வின் அடிப்படை என்றும், சுவாமி விவேகானந்தர் கூறியது போல ஒழுக்கத்தை அடிப்படியாக கொண்டு மாணவர்கள் அதை கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *