சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தை முடித்த பிறகு ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் இறுதிகட்டத்தை எட்டும். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் முழு நேர அரசியலில் ரஜினி ஈடுபட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால் ரஜினி தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் அடுத்த படத்தின் கதையையும் இறுதி செய்திருக்கிறார் என்கிறார்கள். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இந்த படம் வெளியான பின்னர் ரஜினி படத்திற்கான வேலையை தொடங்க இருக்கிறார்.
ரஜினி அடுத்து வெளியாக இருக்கும் 2.0 படத்தின் ரிலீசுக்கான முழு வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். படத்தின் இடைவெளி வரைக்கும் ரஜினிக்கு தான் முக்கியத்துவம். இடைவெளிக்கு 10 நிமிடங்கள் முன்புதான் வில்லன் அக்‌‌ஷய்குமார் படத்தில் தோன்றுகிறார். அதில் இருந்து ஒட்டுமொத்த படமும் அக்‌‌ஷய்குமாருக்கு தான் முக்கியத்துவம் என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *