கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள வனப்பதியில் பத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாம் இட்டுள்ளது. இந்த யானைகள் கூட்டம் இரு பிரிவுகளாக பிரிந்து ஒன்பது யானைகள் கொண்ட கூட்டம் ஒருப்புறமாகவும்,மற்றும் மூன்று யானைகள் கூட்டம் கொண்ட யானைகள் ஒரு புறமாகவும் சுற்றி திரிகின்றன.
மேலும் வனப்பகுதி அருகே உள்ள கிராமங்களிள் தொடர்ந்து ஒரு மாதம்மாக சுற்றி வரும் யானை கூட்டங்கள் பகல் நேரங்களில் வனப்பகுதிகளிலும் இரவு நேரங்களில் கிராமப்புறபகுதியில் உள்ள விவசாய நிலங்களிளும் சுற்றி திறிகின்றன
இன் நிலையில் வனத்துறை அதிகரிகள், வெடி வைத்தும்,ஒலிப்பெருக்கி மூலமாக சத்தத்தை எழுப்பியும் அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட மேற்க்கொள்ளும் முயற்ச்சிகள் தோல்வியிலே முடிகின்றன
பிள்ளையக்கொத்தூர், கிரஷர் தொழிற்சாலை அருகில் 4 நாட்களாக தொடர்ந்து இருந்த யானைகள், அத்தொழிற்சாலை ஊழியர்களை விரட்டி வந்ததால் அப்பகுதிக்கு விவசாயம் செய்வோர்,கூலி வேளைக்கு செல்வோர் என யாரும் அவ்வழியே செல்லாமல் பயந்து வந்தனர்
பெரும்பாலும் இரவு நேரங்களில் வெளியே வரும் காட்டு யானைகள்காலை 8 மணியளவில் சப்படி கிராமத்தின் அருகாமையிலேயே, பொதுமக்கள் பயண்படுத்தி வரும் சாலை பகுதியிலேயே நடந்து சென்றது சுற்றுவட்டார கிராம மக்களுக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது..
இந்த காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதியில் விரட்டிட, மேலும் அதிகமான வை ஊழியர்களை கொண்டு விரைவாக விரட்டிட கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்