ரேடியோ ஜாக்கி “ரசிகன் ராஜேஷ்” மர்ம நபர்களால் படுகொலை

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ரேடியோ ஜாக்கியான ரசிகன் ராஜேஷ் என்பவரை மர்ம நபர்கள் படுகொலை செய்தனர்.

நாட்டுப் புறப்பாடகருமான ரசிகன் ராஜேஷும் அவரது நண்பர் குட்டனும் நேற்று மேடை நிகழ்ச்சி ஒன்றை முடித்துக் கொண்டு இரவு 2 மணியளவில் மாதவூர் என்ற இடத்தில் உள்ள ராஜேஷின் ஸ்டுடியோவுக்குத் திரும்பினர். அங்கு அவர்கள் தங்கள் கருவிகளை இறக்கி வைத்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த மர்மநபர்கள் கூரிய ஆயுதங்களால் அவர்களை சரமாரியாகத்தாக்கினர்.

இது குறித்த அக்கம்பக்கத்தவர்களின் தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி ராஜேஷ் உயிரிழந்த நிலையில் அவரது நண்பர் குட்டனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மர்ம நபர்களை தேடி வரும் போலீசார் கொலைக்கான நோக்கம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *