ராக்கி சாவந்த் மீது அவதூறு வழக்குத் தொடுத்தார் தனுஸ்ரீ தத்தா

பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் மீது அவதூறு வழக்குத் தொடுத்துள்ள தனுஸ்ரீ தத்தா, 10கோடி ரூபாய் இழப்பீடு கோரியுள்ளார். ஹார்ன் ஓகே பிளீஸ் என்கிற படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடிக்கும்போது நானா படேகர் தனக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகத் தனுஸ்ரீ தத்தா குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில் தனுஸ்ரீ தத்தா பொய்யர் என்றும், அவர் நானா படேகர் மீது கூறும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் கட்டுக்கதை என்று மற்றொரு நடிகையான ராக்கி சாவந்த் தெரிவித்தார். இதையடுத்து ராக்கி சாவந்த் மீது அவதூறு வழக்குத் தொடுத்துள்ள தனுஸ்ரீ தத்தா, பத்துக்கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும் கோரியுள்ளார். தனுஸ்ரீயின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் ராக்கி சாவந்த் பேசியுள்ளதாகவும், அது குறித்து விளக்கம் அளிக்காவிட்டால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தனுசிறீயின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *