நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை – நடிகை மாதுரி தீக்சித்

2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக வெளியான தகவலை நடிகை மாதுரி தீக்சித் மறுத்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் புனே தொகுதியில் மாதுரி தீக்சித்தை பா.ஜ.க களம் இறக்க உள்ளதாக தகவல் வெளியானது.

ஆறு மாதங்களுக்கு முன்னர் மும்பையில் மாதுரி தீக்சித்தை பா.ஜ.க தலைவர் அமித் ஷாவும், மராட்டிய முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசும் சந்தித்து பேசியிருந்தனர்.

இதன் தொடர்ச்சியாகவே புனே தொகுதிக்கான பா.ஜ.க வேட்பாளர் பட்டியலில் மாதுரி தீக்சித் பெயர் உள்ளதாக அக்கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியிருந்தார். ஆனால் இந்த தகவலை மாதுரி தீக்சித் மறுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட உள்ளதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்றும் அந்த தகவல் வெறும் யூகம் மட்டுமே என்றும் மாதுரி விளக்கம் அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *