தயாரிப்பாளர், திரையரங்குகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர கமல், விஷால் முயற்சி

திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்குகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். கடந்த 3 வாரகாலமாக புதிய படங்கள் வெளியாகாத நிலையில் மார்ச் 15 முதல் சென்னை தவிர தமிழகம் முழுவதும் திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. 16ம் தேதி முதல் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டதால் தமிழ்த்திரையுலகம் ஒட்டு மொத்தமாக முடங்கியுள்ளது. இப்பிரச்சினை தொடர்பாக கமல்ஹாசனை சந்தித்து ஆலோசனை நடத்திய விஷால், தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *