சாய் பல்லவி முதல் ஷாலினி பாண்டே வரை… அறிமுகத்துக்கு முன்னரே மனதை அள்ளிய ஹீரோயின்கள்!

இன்றைய தமிழ் சினிமாவைப் பொருத்தவரையில் ஹீரோயின்களில் 90 சதவிகிதம் மற்ற மாநிலத்தில் இருந்துதான் களமிறங்குகிறார்கள், களமிறக்கப்படுகிறார்கள். அடுத்தடுத்து கமிட்டாக அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் என்று சொல்லுமளவிற்கு கோலிவுட்டிற்குள் ஒன்றிவிடுகிறார்கள். முன்பெல்லாம் ஒரு கதாநாயகி ஒரு தமிழ் படத்திலாவது நடித்து முகம் தெரிந்தால்தான் அவர்களைக் கொண்டாடுவார்கள், அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாவார்கள். ஆனால், இன்றோ ஒரு படத்தில்  கமிட்டாகி அதற்கான ஸ்டில்ஸ் வெளியே வந்தவுடனேயே அவர்கள் கனவுக்கன்னியாக மாறிவிடுகிறார்கள். அப்படித் தமிழில் இன்னும் தங்களின் நடிப்பில் ஒரு படம்கூட வெளிவராத நிலையில், ஒரு சில கதாநாயகிகளின் பெயர்கள் முன்னனி ஹீரோயின்களின் வரிசைக்கு பிறகு பேசப்பட ஆரம்பித்திருக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *