இயேசு கிறிஸ்துவை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியதாக இளையராஜா மீது புகார்

இயேசு கிறிஸ்துவை கொச்சை படுத்தும் வகையில் பேசியதாக இசையமைப்பாளர் இளையராஜா மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் அளிக்கப்பட்டுள்ள புகாரில் அண்மையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் இளையராஜா இயேசு கிறிஸ்து மறித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தது குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

இளையராஜா மீது மத உணர்வை புண்படுத்துதல் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்யக் கோரப்பட்டுள்ளது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்த அமைப்பினர், இளையராஜா கிறிஸ்தவர்கள் மத்தியில் மன்னிப்பு கோர வலியுறுத்தினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *