மூழ்கும் படகில் சிக்கித் தவித்த இரு மீனவர்கள்

அயர்லாந்தில் மூழ்கும் படகில் சிக்கித் தவித்த இரு மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட காட்சிகள் வெளியாகி உள்ளன.

கன்ட்ரி டவுன் என்ற கடல் பகுதியில் அயர்லாந்தைச் சேர்ந்த இரு மீனவர்கள் தங்களின் விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது நடுக்கடலில் படகில் துளை விழுந்ததால் படகின் இயந்திரம் முழுமையாகப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மீனவர்களின் படகு மூழ்கத் தொடங்கியது.

இதனால் அவர்கள் உதவி கேட்டு அனுப்பிய செய்தியைத் தொடர்ந்து அருகாமையில் இருந்த படகு ஒன்று மீனவர்களை மீட்க விரைந்தது. அப்போது படகு மூழ்குவதும், அதிலிருந்து மீனவர்கள் உயிர்தப்புவதும் படம் பிடிக்கப்பட்ட காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. இறுதியில் இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *