மியான்மருக்குச் சென்ற டிவிட்டர் தலைமைச் செயலதிகாரி ஜேக் டோர்ஸி டிவிட்டால் சர்ச்சை

மியான்மருக்குச் சென்ற டிவிட்டர் நிறுவன தலைமைச் செயலதிகாரி ஜேக் டோர்ஸி, அங்குள்ள மக்கள் முழு மகிழ்ச்சியோடு வாழ்வதாகக் கூறியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

மியான்மரில் ரோஹிங்யாக்கள் இனப்படுகொலை, கூட்டுப் பாலியல் பலாத்காரம், கொத்துக் கொத்தாக கொல்வது, அண்டை நாடுகளுக்கு அவர்களை அகதிகளாக விரட்டுவது, போர்க்குற்றம் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளைச் சந்தித்துள்ளது.

இந்நிலையில், இந்தப் பிறந்தநாளுக்கு தாம் மியான்மர் சென்றதாகவும், அங்கு கௌதம புத்தரின் புகழ்பெற்ற விபாசனா என்ற தியானக் கலையைக் கற்றுக் கொண்டதாகவும் டிவிட்டர் நிறுவன தலைமைச் செயலதிகாரி ஜேக் டோர்ஸி தமது டிவிட்டர் பக்கத்தில் கடந்த சனிக்கிழமை குறிப்பிட்டுள்ளார்.

பயணம் மேற்கொள்ள விரும்பினால், மியான்மர் சென்று சிறப்பு தியானக் கலையைக் கற்று, அமைதியடையுமாறு தமது பின்தொடர்பாளர்களையும் கேட்டுக் கொண்டார். மியான்மர் அழகான நாடு என்றும், அங்குள்ள மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்வதாகவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *