பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒரு டாலர் கூட நிதி உதவி வழங்கி இருக்கக் கூடாது என்று ஐ.நா. அவைக்கான அமெரிக்க பிரதிநிதி நிக்கி ஹாலே கூறியுள்ளார்.
அமெரிக்க இதழுக்கு பேட்டி அளித்த அவர், ஒரு நாட்டுடன் கூட்டு சேரும் போது அதற்கேற்றாற்போல் உத்திகளை வகுக்க வேண்டும் என்று தெரிவித்தார். பாகிஸ்தான் விவகாரத்தில் கண்ணை மூடிக் கொண்டு அமெரிக்கா நிதி அளித்து விட்டதாக நிக்கி ஹாலே சுட்டிக் காட்டினார்.
ஆனால் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் மட்டுமே அளித்துக் கொண்டிருந்ததாகவும், இதன் காரணமாக அங்குள்ள அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார். அவர்களுக்கு நிதி கொடுத்திருக்கக் கூடாது என்று தெரிவித்த அவர், அந்த நிதியை அமெரிக்காவே பயன்படுத்தி இருக்க வேண்டும் என்றும் கூறினார்.