பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை மறுப்பதற்கில்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பருவநிலை மாற்றம் என்பது அமெரிக்கத் தொழில்துறை வளர்ச்சியைத் தடுப்பதற்கான புரட்டு என டொனால்டு டிரம்ப் 2012ஆம் ஆண்டிலேயே தெரிவித்திருந்தார். அதன்படி தான் அதிபராகப் பதவியேற்ற உடனேயே பருவநிலை மாற்றம் தொடர்பான பாரீஸ் உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த டிரம்ப், பருவநிலை மாற்றம் தொடர்பாகத் தான் முன்பு தெரிவித்த கருத்தில் இருந்து பின்வாங்கியுள்ளார். அந்தப் பேட்டியில் பருவநிலை மாற்றம் என்பதைத் தான் மறுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலை மனிதனால் உருவாக்கப்பட்டதா எனத் தனக்குத் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார். பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காகப் பல்லாயிரம் கோடி டாலர்களைத் தான் கேட்கவும் இல்லை, அதேநேரத்தில் இழக்கவும் விரும்பவில்லை என்றும் டிரம்ப் தெரிவித்தார்.