நோபல் பரிசை வென்றவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன… ஸ்டோக்ஹோம் நகரில் வண்ணமிகு நிகழ்ச்சி

இந்தாண்டுக்கான நோபல் பரிசை வென்றவர்களுக்கு, ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெற்ற வண்ணமயமான விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன

இயற்பியலுக்கான நோபல் பரிசு GERARD MOUROU வுக்கும் DONNA STRICKLANDக்கும் வழங்கப்பட்டது. ஸ்வீடன் மன்னர் கார்ல் குஸ்தாப் மற்றும் பட்டத்து இளவரசி விக்டோரியா ஆகியோர் விருதுகளை வழங்கினர். இதே போல் இயற்பியலுக்கான விருதை 96 வயதான ஆர்தர் அஸ்கின் சார்பில் அவர் மகன் மைக்கேல் அஸ்கின் விருதைப் பெற்றுக் கொண்டு பார்வையாளர்களை நோக்கி உற்சாகமாக கையசைத்தார்

வேதியியலுக்கான நோபல் பரிசுகள் பிரான்சிஸ் அர்னால்ட், ஜார்ஜ் ஸ்மித் மற்றும் கிரிகோரி வின்ட்டர் ஆகியோருக்கு அளிக்கப்பட்டன.

மருத்துவத்துறைக்கான நோபல் விருதுகளை ஜேம்ஸ் ஆலிசன் மற்றும் தசுக்கு ஹோன்ஜோ பெற்றுக் கொண்டார்.
பொருளாதார அறிவியலுக்கான விருதை பால் எம். ரோமர் பெற்றார்.

இதனிடையே நோபல் விருது பெறுவோரை கௌரவிக்கும் வகையில் ஓஸ்லோ நகரில் நடைபெற்ற பேரணியில் கையில் விளக்குகளையும் தீப்பந்தங்களையும் ஏந்திக் கொண்டு ஆயிரக்கணக்கானோர் கலந்துக் கொண்டனர். அங்கு விடுதியில் தங்கியிருந்த நோபல் விருது பெற்ற டெனிஸ் முக்வேஜெ மற்றும் நதினா முரத் உள்ளிட்டோர் கூட்டத்தினரைக் கண்டு மகிழ்ச்சியுடன் கையசைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *