ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் விமானத்தில் எஞ்சின் கோளாறு

ஜி20 உச்சிமாநாட்டிற்கு புறப்பட்ட ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் விமானம் எந்திர கோளாறு காரணமாகவே, பாதி வழியிலேயே தரையிறக்கப்பட்டது. இன்று நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல், தனி விமானத்தில் அர்ஜெண்டினா புறப்பட்டார்.

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, இயந்திர கோளாறு ஏற்பட்டதை அறிந்த விமானி, ஜெர்மனியில் உள்ள கலோக்னி  நகரில் தரையிறக்கினார். இதையடுத்து, அவர் மாற்று விமானத்தில் ஜி20 உச்சி மாநாட்டுக்குப் புறப்பட்டார். இதனால், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல், ஜி20 உச்சிமாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியை தவற விடக் கூடும் என கூறப்படுகிறது.

இதனிடையே மாநாட்டின் ஒரு பகுதியாக ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க இருந்ததை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *