சீனாவுக்குக் கம்ப்யூட்டர் சிப்களை வழங்குவதை நிறுத்த அமெரிக்கா முடிவு; தைவான் நிறுவனத்துடன் சீனா உடன்படிக்கை

சீனாவுக்குக் கணினி சிப்களை வழங்குவதை நிறுத்த அமெரிக்க முடிவெடுத்துள்ளதை அடுத்துத் தைவான் சிப் தயாரிப்பு நிறுவனங்களுடன் சீனா உடன்படிக்கை செய்துள்ளது.

சீனா, அமெரிக்கா இடையே வணிகப் போர் ஏற்பட்டுள்ளதையடுத்து பரஸ்பரம் இருநாடுகளும் பொருட்கள் மீது  கடுமையான இறக்குமதி வரி விதித்து வருகிறது. இந்த வணிகப் போரின் ஒருபகுதியாகச் சீனாவுக்குக் கணினி சிப்களை வழங்குவதை நிறுத்த அமெரிக்கா முடிவெடுத்துள்ளது.

இந்நிலையில் தைவானில் உள்ள சிப் தயாரிப்பு நிறுவனமான யுனைட்டெட் மைக்ரோஎலக்ட்ரானிக்ஸ் கார்ப்போரேசனுடன் சீனாவின் பியூஜியன் ஜின்குவா இன்டக்ரேட்டட் சர்க்கியூட் நிறுவனம் உடன்படிக்கை செய்துள்ளது.

இதன்மூலம் அமெரிக்க நிறுவனங்கள் சிப்களை ஏற்றுமதி செய்யாவிட்டாலும் சீனாவுக்குத் தேவையான சிப்கள் தொடர்ந்து கிடைப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டில் மட்டும் சீனா 19இலட்சத்து 63ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்குக் கம்ப்யூட்டர் சிப்களை இறக்குமதி செய்துள்ளது. இது அந்த நாட்டின் எண்ணெய் இறக்குமதி மதிப்பை விட அதிகமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *