சீனாவில் 31 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து

சீனாவில் 31 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கன்சு  மாகாணத்தில் உள்ள லான்சூ பகுதியில், நேற்றிரவு பதினொன்றரை மணியளவில், நீண்ட டிரெய்லர் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, சுங்கச் சாவடியில் காத்துக் கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதியது.

இதன் விளைவாக 30 வாகனங்கள் ஒன்றோடு மோதியதில், 14 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 34 பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு 260 அதிகாரிகள் வந்து மீட்புப் பணியைத் துரிதப்படுத்தினர். இந்த விபத்தால் 31 வாகனங்களும் கடுமையாக சேதமடைந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *