சிங்கப்பூரில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மலைமூங்கான் பறவைக்கு சிறப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. உயிரியல் பூங்கா ஒன்றில் வளர்க்கப்பட்டு வரும் அந்தப் பறவைக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, ஸ்கேன் செய்து பார்த்ததில் மேல் அலகில் புற்று நோய் தாக்கம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பறவைக்கு சிறப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
3டி முறையில் தயாரிக்கப்பட்ட மேல் அலகு அந்தப் பறவைக்கு பொருத்தப்பட்டது. தற்போது ஹார்ன்பில் வழக்கமான உற்சாகத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.