இந்தோனேஷியாவில் எரிமலை வெடித்துச் சிதறும் காட்சிகளை மிக அருகில் சென்று படம் பிடித்த காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. நியூஸிலாந்தைச் சேர்ந்த மேத்யூ டேவிசன் என்பவர் இந்தோனேஷியாவில் உள்ள அனாக் கிரக்காட்டவ் என்ற எரிமலையை ஆய்வு செய்து கொண்டிருந்தார்.
எரிமலை சாம்பலையும், புகையையும் ஒருசேர உமிழ்ந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நெருப்புக் கற்களையும் தூக்கி வீசியதுஹாலிவுட் படங்களில் வருவது போன்ற இந்தக் காட்சிகளை நெருக்கமாக நின்று படம் பிடித்த மேத்யூ, எரிமலையின் கீழ் இருந்த படகில் இருந்தபடியே இதனைப் படம் பிடித்ததாகத் தெரிவித்துள்ளார்.