இத்தாலியில் பெய்த ஆலங்கட்டி மழை காரணமாக சாலைகள் பனி மூடிக் காணப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
தலைநகர் ரோம், பீசா மற்றும் ஃபுளோரன்ஸ் உள்ளிட்ட பகுதிகளை கடந்த ஞாயிற்றுக்கிழமை புயலோடு மழையும் தாக்கியது. சாலைகளில் ஆலங்கட்டி மழைப் பொழிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
பனிக்கட்டிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து இறுக்கமாகி பாறை போல் மாறியதால் சாலைகளில் நிறுத்தப்பட்ட வாகனங்களை இயக்க முடியாததால் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.