அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன்னும் வியட்நாமில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்துப் பேச உள்ளனர்.
வியட்நாம் தலைநகர் ஹனோயிலுள்ள மெட்ரோபோல் என்ற சொகுசு ஹோட்டலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் – உடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் இடையிலான 2வது உச்சி மாநாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலில் டிரம்ப்பும், அதனை தொடர்ந்து கிம்மும் அங்கு சென்றடைந்தனர். கடந்த ஜுன் மாதம் சிங்கப்பூரில் முதன் முறையாக இரு தலைவர்களும் சந்தித்துப் பேசியதை தொடர்ந்து, இரண்டாவது முறையாக இந்த சந்திப்பு நிகழ்ந்தது. இரு தலைவர்களும் புன்சிரிப்புடன் கை குலுக்கிக் கொண்டனர்.
அப்போது பேசிய டிரம்ப் மிகவும் வெற்றிகரமான பேச்சுவார்த்தையை எதிர்நோக்கி இருப்பதாக குறிப்பிட்டார். அபரிதமான, வரம்பற்ற பொருளாதார ஆற்றல் வடகொரியாவுக்கு இருப்பதாக டிரம்ப் கூறினார். அனைத்து தரப்பினரும் வரவேற்க கூடிய முடிவை பேச்சுவார்த்தையில் எட்ட முடியும் என்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.