ஃபேஸ்புக் மூலம் 81 ஆயிரம் கணக்குகளில் இருந்து மாமியார்-மருமகன் சண்டை உள்பட்ட பல தனிப்பட்ட குறுஞ்செய்திப் பரிமாற்றங்கள் ஆன்லைனில் விற்கப்படுவதாக வந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன், ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் 81 ஆயிரம் பயனாளர்களின் தனிப்பட்ட குறுஞ்செய்திப் பரிமாற்றமும் கசிந்துள்ளது. தங்கள் நண்பருடன் பேசியது, மருமகனைப் பற்றி தோழியிடம் மாமியார் குறை கூறி புறம் பேசுவது உள்ளிட்ட பல்வேறு குறுஞ்செய்திகள் கசியவிடப்பட்டுள்ளன.
ஒரு பயனாளரின் குறுஞ்செய்தி விவரத்தை கொடுக்க ஹேக்கர்கள் 10 சென்ட் அதாவது சுமார் 7 ரூபாய் வசூலிக்கின்றனர். இதனால் ஃபேஸ்புக்கின் தகவல் பாதுகாப்பு பிரிவுக்கு 11 ஆயிரம் கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.