முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 94ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
டெல்லி ராஷ்ட்ரீய ஸ்மிருதி ஸ்தல் பகுதியில், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு, நினைவகம் கட்டப்பட்டுள்ளது.
இன்று வாஜ்பாயின் 94ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்படும் நிலையில், அவரது நினைவகம் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கப்பட்டது. இதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் வருகை தந்தனர்.
பாஜக தலைவர் அமித்ஷா, அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
முன்னதாக, குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட அனைவரும் வாஜ்பாய் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.