பாஜகவுக்கு எதிரான கட்சிகளை இணைத்து, பொதுவான தளத்தை உருவாக்க இருக்கிறோம் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். முன்னதாக டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு மேற்கொண்டார். இருவரும் தெலுங்கானாவில் காங்கிரசுடன் தெலுங்கு தேசம் கூட்டணி அமைப்பது பற்றி பேசினர். பின்னர் ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது தேசத்தை காக்கவும் ஜனநாயகத்தை காக்கவும் சந்திரபாபு நாயுடு உறுதி அளித்தார். மேலும் பாஜகவுக்கு எதிரான கட்சிகளை இணைத்து, பொதுவான தளத்தை உருவாக்க இருக்கிறோம் என்று கூறிய அவர், ரிசர்வ் வங்கி, சி.பி.ஐ. போன்ற அமைப்புகளை அழிக்க மோடி முயற்சி செய்வதாகவும் ஊழல் செய்தது யார்? ஊழல் பணம் எங்கே சென்றது என்று விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
2018-11-01