மும்பை விமான நிலையத்தில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகளுக்காக விமான நேரங்கள் மாற்றம்

மும்பை விமான நிலையத்தில், காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரை பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியை அடுத்து மிகவும் பரபரப்பாக காணப்படும் மும்பை விமான நிலையம் கடந்த ஆண்டு மழைக்காலத்தின்போது, குண்டும் குழியுமாக மாறியது.

இதனால், நடப்பு ஆண்டில் வடகிழக்கு பருவமழைக்கு முன்பும், பருவமழைக்குப் பிறகும் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகள் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதன்படி, இன்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை விமான நிலைய ஓடுபாதையில் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. இதனால், ஏராளமான விமானங்களின் புறப்பாடு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *