உத்தரப் பிரதேச மாநிலம் பரேய்லியில் தனியார் மருத்துவமனையின் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் சிறுமியை மருத்துவமனை ஊழியரும் வேறு நால்வரும் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பரேய்லியில் பாம்புக் கடிக்குச் சிகிச்சை பெற வந்த சிறுமியைத் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தீவிரச் சிகிச்சைப் பிரிவில் சுவாசக் கருவிகளின் உதவியுடன் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன்பின் பொதுப் பிரிவுக்கு மாற்றப்பட்ட அவர், மருத்துவமனை ஊழியரும் அடையாளந் தெரியாத வேறு 4பேரும் தனைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரிவித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான மருத்துவமனை ஊழியரையும் மற்ற நால்வரையும் தேடி வருகின்றனர்.