தேசியவாத காங். தலைவர் சரத்பவாருடன் மு.க.ஸ்டாலின், கனிமொழி சந்திப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியவாதக் காங்கிரஸ் தலைவர் சரத்பவாரைச் சந்தித்து கலைஞரின் சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் சிலைத் திறப்பு விழா டிசம்பர் 16ஆம் நாள் நடைபெற உள்ளது.

இந்நிலையில் டெல்லி சென்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் தேசியவாதக் காங்கிரஸ் தலைவர் சரத்பவாரைச் சந்தித்துச் சிலைத் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *