உத்தரக்கண்ட் மாநிலம் கேதார்நாத்தில் தீபாவளி கொண்டாடச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள கேதார்நாதர் ஆலயத்தில் வழிபாடு நடத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடி உத்தரக்கண்ட் மாநிலத்தில் ஹர்சில் என்னுமிடத்தில் இராணுவ முகாமில் உள்ள வீரர்களுடன் இன்று தீபாவளி கொண்டாடுகிறார். இதற்காக இராணுவ ஹெலிகாப்டரில் வந்திறங்கிய அவரை இராணுவ அதிகாரிகளும் வீரர்களும் வரவேற்றனர். இராணுவ முகாமில் இருந்து ஹெலிகாப்டரில் கேதார்நாத்துக்குச் சென்ற அவர் கேதாரநாதர் ஆலயத்தில் வழிபாடு நடத்தினார்.
வழிபாட்டுக்குப் பின் பிரதமர் அங்கு வந்த பொதுமக்களைச் சந்தித்துப் பேசினார்.