டெல்லியில் காற்று மாசுபாடு தீவிரம் என்ற நிலையை எட்ட வாய்ப்பு

டெல்லியில் காற்று மாசுபாடு தீவிரம் என்ற நிலையை எட்டுவதற்கான விளிம்பில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே கடந்த செவ்வாய் அன்றும் மிக மோசம் என்ற நிலையில் இருந்து தீவிரம் என்ற நிலையை எட்டியது. இதனால் சுவாவக்கோளாறால் மக்கள் அவதிப்படும் சூழல் உருவாகியுள்ளது. பஞ்சாப் மற்றும் டெல்லி சுற்றுவட்டாரத்தில், பயிர் கழிவுகளை தீயிட்டுக் கொளுத்துவதும் இதற்கு முக்கியக் காரணமாகிறது.

பயிர்க்கழிவுகள் எரிக்கும் செயற்கைக்கோள் புகைப்படத்தை சுட்டிக்காட்டியுள்ள அதிகாரிகள் காற்று மாசு தீவிரம் என்ற நிலையை அடைய இன்னும் 8 புள்ளிகளே இருப்பதாகக் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *