அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு 69 ரூபாய் 64 காசுகளாக உயர்ந்துள்ளது.
நேற்று வர்த்தக நேர முடிவில் ரூபாயின் மதிப்பு 69 ரூபாய் 85 காசுகளாக இருந்தது. இன்று வர்த்தக தொடக்கத்தின் போது, டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு 21 காசுகள் அளவுக்கு அதிகரித்து, 69 ரூபாய் 64 காசுகளாக உயர்ந்தது. இது கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வாகும்.
அந்நிய முதலீடு அதிகரிப்பு, சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவு ஆகியவையே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. இதனிடையே தேசிய மற்றும் மும்பை பங்குச்சந்தைகளும் உயர்வுடன் தொடங்கின. வர்த்தக தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 150 புள்ளிகள் உயர்ந்தது. வர்த்தக தொடக்கத்தில் தேசியப் பங்குச்சந்தை நிப்டி குறியீட்டெண் 10 ஆயிரத்து 900 புள்ளிகளைக் கடந்தது.