காங்கிரஸ் கட்சி அயோத்தி வழக்கைத் தள்ளிப் போடச் சொன்னது – பிரதமர் மோடி

காங்கிரஸ் கட்சி அயோத்தி வழக்கை 2019நாடாளுமன்றத் தேர்தல் வரை தள்ளிப்போட உச்சநீதிமன்றத்திடம் சொல்லி நீதித்துறையை அரசியலுக்குள் இழுத்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இராஜஸ்தான் மாநிலச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஆல்வாரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது, சன்னி வக்பு வாரியம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதாடிய காங்கிரசின் கபில் சிபல், அயோத்தி வழக்கை 2019நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை தள்ளிப்போட உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தியதைக் குறிப்பிட்டார்.

இது நீதித்துறையை அச்சுறுத்தும் செயலாகும் என்றும், இதன்மூலம் நீதித்துறையை அரசியலுக்குள் இழுத்துள்ளதாகவும் மோடி குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *