ஏப்ரல் 11-ம் தேதியிலிருந்து முகாம் அமைத்து வாக்கு இயந்திரங்களை கண்காணிக்கும் வேட்பாளர்…!

உ.பி.யில் முகாம் அமைத்து ஏப்ரல் 11-ம் தேதியிலிருந்து வாக்கு இயந்திரங்களை வேட்பாளர் ஒருவர் கண்காணித்து வருகிறார்.

இந்திய நாடாளுமன்றத்திற்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. கடைசிக்கட்ட தேர்தல் மே 19-ம் தேதி முடிந்தது. நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில், உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் சந்தேகத்துக்குரிய வகையில் வாகனங்களில் இடமாற்றம் செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன என்று  இதுதொடர்பான எதிர்க்கட்சிகளின் புகாருக்கு தேர்தல் கமி‌ஷன் பதில் அளித்தது.
இருப்பினும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை  பாதுகாப்பு படையினரை விடவும் அதிமுக்கியத்துவமாக வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் பாதுகாத்து வருகின்றனர்.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் வேட்பாளர் ஒருவர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையருகே முகாம் அமைத்து ஏப்ரல் 11-ம் தேதியிலிருந்து கண்காணிப்பை மேற்கொள்கிறார் என்பது தெரியவந்துள்ளது. மீரட்டில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி வேட்பாளர் யாகூப் குரேஷி  ‘பைனாகுலர்’ மூலம்  சோதனை செய்தார். மாநிலம் முழுவதும் வேட்பாளர்கள், தொண்டர்கள் இரவு பகலாக உஷார் நிலையில் கண்காணிப்பை மேற்கொள்கிறார்கள்.
மீரட்டில் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு வெளியே இரு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஷிப்ட் முறையில் வேட்பாளர்கள், தொண்டர்கள் கண்காணிப்பை மேற்கொள்கிறார்கள். சிசிடிவி காட்சிகளையும் அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார்கள். பகுஜன் சமாஜ் மாவட்ட தலைவர் சுபாஷ் பிரதான் பேசுகையில், நாங்கள் ஏப்ரல் 11-ம் தேதி தேர்தல் முடிந்ததுமே இங்கு முகாம் அமைத்து விட்டோம். அப்போதிலிருந்துதே நாங்கள் கண்காணிப்பை தொடர்கிறோம் என்று கூறியுள்ளார்.
பைனாகுலர் மூலமாக பார்ப்பதால் ஒவ்வொரு நகர்வையும் எங்களால் துல்லியமாக கண்காணிக்க முடியும் என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *