இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே டெல்லி வந்தார்

மூன்று நாள் பயணமாக டெல்லி வந்துள்ள இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பிரதமர் மோடியுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

கடலோர பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் இந்தப் பேச்சுவார்த்தையில் இடம் பெறும். தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு தொடர்பாகவும் ரணில் இந்தியாவின் ஆலோசனையைப் பெற உள்ளார். ஹம்பன்தோட்டா  விமான நிலையப் பராமரிப்பை இரு நாடுகளும் பகிர்ந்துகொள்வது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

இந்தியாவின் உளவுத்துறையான ரா அமைப்பு தம்மைக் கொல்ல திட்டமிடுவதாக வந்த தகவல்களை அதிபர் சிறிசேனா மறுத்தது குறித்தும், மோடி- ரணில் சந்திப்பில் பேசப்படும் என்று கூறப்படுகிறது.  முன்னதாக, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோரையும் ரணில் இன்று சந்திக்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *