ஆப்கானிஸ்தானில் இந்தியா அமைக்கும் நூலகத்தில் சென்று யார் படிக்கப்போகிறார்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிண்டலாக கூறியுள்ளார். வெளிநாடுகளுக்கு நிதி உதவி வழங்குவதை குறைக்கும் முடிவில் தான் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆப்கானிஸ்தானில் இந்தியா நூலகம் அமைத்து வருவதாக இந்திய பிரதமர் மோடி தன்னிடம் அடிக்கடி கூறுவதாக குறிப்பிட்டுள்ள டிரம்ப், ஆனால் அந்த நூலகத்தில் சென்று யார் படிக்கப்போகிறார்கள் என்பது தான் தனது கேள்வி என்று கிண்டலடித்துளளார்.
ஆப்கானிஸ்தானின் கல்வி வளர்ச்சிக்கு இந்தியா உதவிகள் செய்து வருவதை டிரம்ப் தவறாக புரிந்து கொண்டு பேசுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.