அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதில் கட்டுப்பாடுகளை கொண்டு வர வலியுறுத்தல்

அரசியல் கட்சிகளுக்கு, பெயர் சொல்லாதவர்கள் வழங்கும் நன்கொடை உச்சவரம்பை 2 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்குமாறு, மத்திய அரசுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு தனிநபர்களும், நிறுவனங்களும் வழங்கும் நன்கொடை தேர்தல் நிதியாக பயன்படும் நிலையில், அவர்கள் பெயர் கூறாமல் வழங்கும் நிதிக்கு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.

அதன்படி, அரசியல் கட்சிகளுக்கு ரொக்கமாக அளிக்கிற நன்கொடைக்கு 2 ஆயிரம் ரூபாயாக உச்ச வரம்பை நிர்ணயிக்க வேண்டும் என்றும், பெயர் கூறாமல் வழங்குகிற நன்கொடைக்கும் 2 ஆயிரம் ரூபாய் என்ற உச்சவரம்பை நிர்ணயிக்கவும் கூறி இருந்தது. இதையடுத்து, ரொக்கமாக நன்கொடை வசூலிக்கும் உச்சவரம்பை 2 ஆயிரம் ரூபாயாக ஏற்று, அதை நிதி சட்டத்தில் சேர்த்த மத்திய அரசு, பெயர் கூறாமல் வழங்கும் நன்கொடைக்கான உச்சவரம்பை நிர்ணயிக்கவில்லை. இந்நிலையில், இதை சுட்டிக்காட்டி, மத்திய அரசுக்கு, தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *