அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சென்றுள்ள நிதியமைச்சர் அருண்ஜேட்லி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய இந்தியா திரும்பிவிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அருண்ஜேட்லிக்கு கடந்த ஆண்டு மே மாதம் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்நிலையில் மருத்துவப் பரிசோதனைக்காக, அவர் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அருண்ஜேட்லி பிப்ரவரி 1க்கு முன் இந்தியா திரும்பும் வாய்ப்புகள் குறித்து பல்வேறு செய்திகள் வெளியான நிலையில், பட்ஜெட்டை தாக்கல் செய்ய அவர் இந்தியா திரும்பிவிடுவார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.