மேகதாது அணை விவகாரத்தில் தி.மு.க., காங் வெளிவேஷம் – பொன் ராதாகிருஷ்ணன்

மேகதாது அணை விவகாரம் குறித்து அரசிடம் பேச, திமுக, தமிழக காங்கிரஸ் தலைவர்களை கர்நாடகாவுக்கு அனுப்பியிருக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாகர்கோவில் வெட்டூரணிமடத்தில் உள்ள சுடலைமாடசாமி கோயிலில் வழிபாடு நடத்திய அவர், அங்கு புதிய மண்டபம் கட்டும் பணிகளுக்காக அடிக்கல் நாட்டினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன் ராதாகிருஷ்ணன், மேகதாது அணை விவகாரத்தில் திமுகவும், தமிழக காங்கிரசும் வெளிவேஷம் போட்டுத் திரிவதாக விமர்சனம் செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *