பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக பொருளாளராக நியமனம்

பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள, தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தேமுதிக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில், தேமுதிக அவைத் தலைவராக வி.இளங்கோவனும், தேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த்தும், தேமுதிக கொள்கை பரப்பு செயலாளராக அழகாபுரம் மோகன் ராஜூம் ஒரு மனதாக அறிவிக்கப்பட்டனர். தேமுதிக-வில் இதுவரை கட்சி பதவி எதையும் வகிக்காத பிரேமலதா விஜயகாந்துக்கு முதன் முறையாக பொருளாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *