மக்களவை தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி கடந்த 19 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளுக்கும் காலியாக உள்ள 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது.
கடந்த 19-ஆம் தேதியுடன் தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து நாடு முழுவதும் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் தி மு க கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. திருச்சியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் முன்னிலை வகித்து வருகிறார். திருநெல்வேலியில் தி மு க வேட்பாளர் ஞானதிராவிடம் முன்னிலை வகித்து வருகிறார். தூத்துக்குடியில் தி மு க வேட்பாளர் கனிமொழி முன்னிலை வகித்து வருகிறார். பெரம்பூரில் தி மு க கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர் முன்னிலை வகித்து வருகிறார். இது வரை 12 இடங்களில் தி மு க கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது .